Press "Enter" to skip to content

2-ம் கட்ட பொருளாதார சிறப்பு திட்டங்கள் – அறிவிப்பை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்

பொருளாதார சிறப்பு திட்டங்களுக்கான இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிடத்தொடங்கினார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் முதல்கட்டமாக ரூ.3.60 லட்சம் கோடிக்கான திட்டங்களை நேற்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். நேற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், தன்னிறைவு இந்தியா பொருளாதார சிறப்பு திட்டங்களின் இரண்டாம் அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று 4 மணி முதல் வெளியிட்டு வருகிறார்.

இதில் புலம்பெயர் தொழிலாளர்கள், தொருவோர வியாபாரிகள், சிறு வணிகர்கள், சிறு விவசாயிகள் உள்பட 9 அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »