Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 7 ஆயிரத்து 300 பேர் – மாவட்ட வாரியாக விவரங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 7 ஆயிரத்து 365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. 

இதில் விமான நிலைய தனிமைப்படுத்தல், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். 

மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 240 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவுக்கு இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரி விவரம்:- 

அரியலூர் – 335

செங்கல்பட்டு – 358

சென்னை – 4,834

கடலூர் – 384

தர்மபுரி – 4

திண்டுக்கல் – 31

கள்ளக்குறிச்சி – 51

காஞ்சிபுரம் – 97

கன்னியாகுமரி – 14

கரூர் – 13

கிருஷ்ணகிரி – 20

மதுரை – 47

நாகப்பட்டினம் – 3

நாமக்கல் – 16

நீலகிரி – 3

பெரம்பலூர் – 124

புதுக்கோட்டை – 5

ராமநாதபுரம் – 9

ராணிப்பேட்டை – 35

சேலம் – 5

சிவகங்கை – 1

தென்காசி – 20

தஞ்சாவூர் – 23

தேனி – 29

திருப்பத்தூர் – 10

திருவள்ளூர் – 410

திருவண்ணாமலை – 123

திருவாரூர் – 3

தூத்துக்குடி – 11

திருநெல்வேலி – 51

திருச்சி – 11

வேலூர் – 13

விழுப்புரம் – 251

விருதுநகர் – 12

விமானநிலைய தனிமைப்படுத்தல் – 9

மொத்தம் – 7,365

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »