தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 7 ஆயிரத்து 365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.
இதில் விமான நிலைய தனிமைப்படுத்தல், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 240 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரி விவரம்:-
அரியலூர் – 335
செங்கல்பட்டு – 358
சென்னை – 4,834
கடலூர் – 384
தர்மபுரி – 4
திண்டுக்கல் – 31
கள்ளக்குறிச்சி – 51
காஞ்சிபுரம் – 97
கன்னியாகுமரி – 14
கரூர் – 13
கிருஷ்ணகிரி – 20
மதுரை – 47
நாகப்பட்டினம் – 3
நாமக்கல் – 16
நீலகிரி – 3
பெரம்பலூர் – 124
புதுக்கோட்டை – 5
ராமநாதபுரம் – 9
ராணிப்பேட்டை – 35
சேலம் – 5
சிவகங்கை – 1
தென்காசி – 20
தஞ்சாவூர் – 23
தேனி – 29
திருப்பத்தூர் – 10
திருவள்ளூர் – 410
திருவண்ணாமலை – 123
திருவாரூர் – 3
தூத்துக்குடி – 11
திருநெல்வேலி – 51
திருச்சி – 11
வேலூர் – 13
விழுப்புரம் – 251
விருதுநகர் – 12
விமானநிலைய தனிமைப்படுத்தல் – 9
மொத்தம் – 7,365
Related Tags :
Source: Maalaimalar