Press "Enter" to skip to content

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

ராஜஸ்தானில் ஒரே நாளில் 242 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஜெய்ப்பூர்:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 5,202 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் ஒரே நாளில் கொரோனாவால் 242 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் 5 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »