Press "Enter" to skip to content

கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேர் மீட்பு – நம்பிக்கை அளிக்கும் தமிழகம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 987 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 800-ஐ கடந்தது.

சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 743 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் சிலர் விமான நிலையத்திலும், ரெயில் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இன்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 987 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் – 345

செங்கல்பட்டு – 193

சென்னை – 2,823

கோவை – 144

கடலூர் – 381

தர்மபுரி – 4

திண்டுக்கல் – 106

ஈரோடு – 69

கள்ளக்குறிச்சி – 58 

காஞ்சிபுரம் – 124

கன்னியாகுமரி – 20

கரூர் – 52

கிருஷ்ணகிரி – 18

மதுரை – 108

நாகை – 45

நாமக்கல் – 77

நீலகிரி – 12

பெரம்பலூர் – 91

புதுக்கோட்டை – 6

ராமநாதபுரம் – 21

ராணிப்பேட்டை – 58

சேலம் – 35

சிவகங்கை – 13

தென்காசி – 48

தஞ்சாவூர் – 66

தேனி – 44

திருப்பத்தூர் – 22

திருவள்ளூர் – 191

திருவண்ணாமலை – 50

திருவாரூர் – 30

தூத்துக்குடி – 29

திருநெல்வேலி – 78

திருப்பூர் – 114

திருச்சி – 66

வேலூர் – 26

விழுப்புரம் – 278

விருதுநகர் – 37

  

மொத்தம் – 5,882 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »