டெல்லியில் நேற்று மேலும் 571 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,659 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று மேலும் 571 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,659 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் நேற்று ஒரே நாளில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,659 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 3 நாட்களாக டெல்லியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 500க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar