Press "Enter" to skip to content

சோனியா தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் – உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்

சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்பார் என சிவசேனா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க மே 22-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

சோனியா காந்தி தலைமை வகிக்கும் இந்த கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெறுகிறது. 

இந்நிலையில், சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்பார் என சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

ஆனால், சோனியா தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »