Press "Enter" to skip to content

ஒரே நாளில் 60 பேர் பலி – அதிரும் மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 60 உயிரிழந்தனர்.

மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரம் குறித்த தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

மாநிலத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 608 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 910 ஆக அதிரித்துள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 821 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 404 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 60 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,577 ஆக அதிகரித்துள்ளது.   

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »