Press "Enter" to skip to content

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2164 பேருக்கு கொரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்:

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. 

கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 32 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,133 ஆக அதிகரித்துள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »