Press "Enter" to skip to content

14 நாட்கள் கோரன்டைன் தேவையில்லை: சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறோம் என்கிறது ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டிற்கு ஜூலை 1-ந்தேதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறையில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 8 கோடி மக்கள் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா செல்கின்றனர். ஸ்பெயின் நாட்டின் ஜிடிபி-யில் 12 சதவீதம் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கிறது. 2.6 மில்லியன் வேலைவாய்ப்பை மக்கள் பெற்று வருகிறார்கள்.

கேனரி மற்றும் பலேரிக் தீவுக்கூட்டங்கள் கிட்டத்தட்ட சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பியுள்ளன. சுற்றுலா சீசன் தொடங்கும் நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஸ்பெயினை தாக்கியதால் சுற்றுலாத்துறை முற்றிலும் முடங்கிப் போகின. மார்ச், ஏப்ரல் என இரண்டு மாதங்கள் சுனாமி போன்று கொரோனா சுழற்றி அடித்தது. இதில் 26 ஆயிரத்து 834 பேர் உயிரிழக்க நேரிட்டது.

தற்போது ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் சில இடங்களில் பார்கள், மியூசியம், தேவாலயங்கள்  போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் மிகவும் அதிக பாதிப்புக்குள்ளான மாட்ரிட், பார்சிலோனா போன்ற நகரங்களில் கூட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. லா லிகா கால்பந்து லீக் போட்டிகள் ஜூன் 8-ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்க இருக்கின்றன.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஜூலை 1-ந்தேதியில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எந்தவித கோரன்டைன் நடைமுறையை பின்பற்ற வேண்டாம் என கேபினட் மந்திரிகள் கூட்டத்தில் முடீவு எடுக்கப்பட்டுள்ளன.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஏற்கனவே கடந்த வாரம், ‘‘வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஜூலையில் இருந்து வரவேற்க ஸ்பெயின் தயாராக இருக்கின்றது. ஆனால், கட்டாயம் இரண்டு வாரங்கள் கோரன்டைன் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லமாட்டேன்’’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »