Press "Enter" to skip to content

கொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா – பாதிப்பு எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்குகிறது

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2190 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்குகிறது.

வெப்ப பரிசோதனை செய்யும் ஊழியர்

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2190 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்குகிறது.

மும்பை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2190 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 56,948 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 105 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1897 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »