Press "Enter" to skip to content

கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது

கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

முதல் மந்திரி பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். 

இதுதொடர்பாக, பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வந்த 37 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »