Press "Enter" to skip to content

தமிழகத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 4 சிறப்பு தொடர் வண்டிகளை இயக்கதொடர்வண்டித் துறை வாரியம் ஒப்புதல்

ஜூன் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கூடுதலாக ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதற்கான டிக்கெட்டுகளை ரெயில் நிலையத்தின் மையங்களில் முன்பதிவு செய்யலாம் என அண்மையில் அறிவித்தது. முன்னதாக ரெயில்வே துறை அறிவித்த 200 ரெயில்களில் தமிழகத்துக்கு எந்த ரெயிலும் அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே கடந்த 23-ம் தேதி தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கையில் ‘‘கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு’’ குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜூன் 1-ம்தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி ஆகிய வழித்தடங்கள் வழியே இந்த ரெயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »