தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 29-ந்தேதி 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் (மே 30-ந்தேதி) 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று (மே 31-ந்தேதி) 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்தது. ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில் இன்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இன்று 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 184- ஆக அதிகரிப்பு. ஒரே நாளில் 413 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ். 13,170 பேர் குணமடைந்துள்ளனர்.
Related Tags :
Source: Maalaimalar