Press "Enter" to skip to content

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 13,170 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,757லிருந்து 13,170 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை:

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 413 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழகத்தில்  கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,757லிருந்து 13,170 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில்  12 வயதிற்குட்பட்ட 1,322 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

13-60 வயதிற்குட்பட்ட 12,690 ஆண்கள், 7,258 பெண்கள் என மொத்தம் 19,961 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட 1,372 ஆண்கள், 840 பெண்கள் என மொத்தம் 2,212 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »