Press "Enter" to skip to content

தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை: சுகாதாரத்துறை

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும் எனத் தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குக் கட்டண விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9,000 முதல் ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் எனப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீதம் படுக்கைகளை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் காப்பீடு திட்டப் பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாகத் தொகையைச் செலுத்தக் கோரினால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவமனைகள் மீது முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கும் இது பொருந்தும் எனப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »