வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு வருகிற 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், மதம் தொடர்பான இடங்கள், மால்கள், ஓட்டல்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.
வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வழிகாட்டுதல் நெறிமுறைகைள அறித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
* அனைத்து நுழைவு வாயில்களிலும் சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் வைக்க வேண்டும்
* அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்
* வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது
* அன்னதானம் வழங்கும்போது சமூக இடைவெளி விட்டு வழங்க வேண்டும். அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்
* கொரோனா அறிகுறி இல்லாத நபர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும்
* ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கொரோனா தடுப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும்
* வரிசையாக அனுமதிக்கப்படும்போது ஆறு அடி தூர இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
* மக்கள் வழிபாட்டு தலங்களுக்குள் செல்லும் முன் கை மற்றும் கால்களை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Source: Maalaimalar