Press "Enter" to skip to content

கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 51 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், 27 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ள 11 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

இதைத்தொடர்ந்து, கேரளாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,095 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உள்ளது. இங்கு மொத்தம் 848 பேர் குணமடைந்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »