கொரோனா வைரஸ் தொற்று டெல்லியில் அதிகரித்து வரும் நிலையில், மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லி மருத்துவனையில் சிகிச்சை அளிக்கும் விவகாரத்தில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமித் ஷாவை சந்தித்து கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் கூறிய கெஜ்ரிவால் ‘‘கொரோனவை வீழ்த்த அனைத்து ஒத்துழைப்புகளையும் மத்திய அரசு வழங்கும் என அமித் ஷா உறுதியளித்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இது அரசியல் செய்யும் நேரமல்ல. மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநர் பிறப்பிக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவோம் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar