இந்தியாவில் கடந்த 24 நேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 3,20,922 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 10 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளன.
அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 11,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 3,20,922 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,330-லிருந்து 1,62,379 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,884-லிருந்து 9,195 ஆக அதிகரித்தள்ளது. 1,49,348 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Source: Maalaimalar