பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த இருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சென்னையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போதைக்கு அப்படி எண்ணம் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதேவேளையில் மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்தது.
பிரதமர் மோடி வருகிற 17-ந்தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைநடத்திய பின், நாளை 12 மணிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Source: Maalaimalar