Press "Enter" to skip to content

தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போதைக்கு அப்படி எண்ணம் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளையில் மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐகோர்ட் தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைநடத்திய பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கில் மாற்றம் மற்றும் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »