Press "Enter" to skip to content

ஒரே நாளில் 178 பேர் பலி – அதிரும் மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 178 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் வைரஸ் தொடர்பான நேற்றைய விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அந்த தகவலின் படி, மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 786 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,744 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் வைரஸ் பாதிப்பில் இருந்து 5071 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 178 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »