கேரளாவில் நேற்று புதிதாக 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நேற்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அந்த தகவலின் படி, அம்மாநிலத்தில் நேற்று புதிதாக 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 47 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள். 26 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். எஞ்சிய 5 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,234 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஆனால் வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Source: Maalaimalar