Press "Enter" to skip to content

சென்னையில் மட்டும் 1,373 பேர் – மாவட்ட வாரியாக நேற்றைய விவரம்

தமிழகத்தில் நேற்று புதிதாக 2,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 2 ஆயிரத்து 91 பேர். விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 10 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 6 பேர். ரெயில் நிலைய கண்காணிப்பில் 5 பேர். 

எஞ்சிய 29 பேர் சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்கள் ஆகும். 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 21 ஆயிரத்து 990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 28 ஆயிரத்து 641 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 625 பேர் உயிரிழந்துள்ளனர்.

உள்மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் – 3

செங்கல்பட்டு – 115

சென்னை – 1,373

கோவை – 23

கடலூர் – 17

தர்மபுரி – 2

திண்டுக்கல் – 2

ஈரோடு – 3

கள்ளக்குறிச்சி – 3

காஞ்சிபுரம் – 55

கன்னியாகுமரி – 10

கரூர் – 3

மதுரை – 9

நாகை – 9

நீலகிரி – 4

புதுக்கோட்டை – 6

ராமநாதபுரம் – 28

ராணிப்பேட்டை – 18

சேலம் – 14

சிவகங்கை – 15

தென்காசி – 33

தஞ்சாவூர் – 21

தேனி – 6

திருப்பத்தூர் – 4

திருவள்ளூர் – 123

திருவண்ணாமலை – 27

திருவாரூர் – 8

தூத்துக்குடி – 26

திருநெல்வேலி – 19

திருப்பூர் – 4

திருச்சி – 14

வேலூர் – 55

விழுப்புரம் – 26

விருதுநகர் – 13

மொத்தம் – 2,091

வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் வந்தவர்கள்:-

கன்னியாகுமரி வந்தவர்கள் – 9 பேர்

நாகை வந்தவர்கள் – 1 

புதுக்கோட்டை வந்தவர்கள் – 1 

ராணிப்பேட்டை வந்தவர்கள் – 2 பேர்

சேலம் வந்தவர்கள் – 2 பேர்

தென்காசி வந்தவர்கள் – 1

தூத்துக்க்குடி வந்தவர்கள் – 1

திருநெல்வேலி வந்தவர்கள் – 11 பேர்

விழுப்புரம் வந்தவர்கள் – 1  

மொத்தம் – 29

விமான நிலைய கண்காணிப்பு

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் – 6 பேர்

வெளிநாட்டு விமானத்தில் வந்தவர்கள் – 10 பேர் 

ரெயில் நிலைய கண்காணிப்பு – 5 பேர்

மொத்தம் – 21

இந்த விவரங்களின் அடிப்படையில் (2,091+29+21) தமிழகத்தில் நேற்று புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,141 ஆக உள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »