Press "Enter" to skip to content

இரண்டு பேர் ஆதிக்கம் ஏன்?: மக்களுக்கு பா.ஜனதா விளக்க வேண்டும்- காங்கிரஸ் தலைவர்

2 பேர் ஆதிக்கமே மேலோங்கியும், மற்றவர்கள் எல்லாம் அதிகாரமற்றும் இருப்பது ஏன்? என பா.ஜ.க. விளக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ரன்தீப் சிங் சுர்ஜிவாலா

2 பேர் ஆதிக்கமே மேலோங்கியும், மற்றவர்கள் எல்லாம் அதிகாரமற்றும் இருப்பது ஏன்? என பா.ஜ.க. விளக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தனது டுவிட்டர் பக்கத்தில்  ‘‘பெரும்பான்மை மக்களின் ஆட்சி என்று சொல்லப்படும் நிலையில் 2 பேர் ஆதிக்கமே மேலோங்கியும், மற்றவர்கள் எல்லாம் அதிகாரமற்றும் இருப்பது ஏன்?

குதிரைப் பேரம், கும்பலாக மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை அக்கட்சியில் இருந்து உடைத்து வெளியேற்றுவது மற்றும் அரசியல் சாசன அமைப்புகளை கைப்பற்றுவது மட்டும் தான் பா.ஜ.க. மரபா?. நேரு-காந்தி மீதான வெறுக்கத்தக்க வெறுப்பில் பா.ஜ.க. ஏன் வெறித்தனமாக இருக்கிறது? என்பதை ஆளும் பா.ஜ.க. விளக்க வேண்டும்’’என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »