Press "Enter" to skip to content

டெல்லியை உலுக்கும் கொரோனா – 73 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை

டெல்லியில் ஒரே நாளில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

புதுடெல்லி: 

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று ஒரே நாளில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73,780 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 64 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,429 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 3328 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து,மகாராஷ்டிராவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 44,765 ஆக அதிகரித்துள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »