Press "Enter" to skip to content

கொரோனா சிகிச்சைக்கு உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகள் கொள்முதல் – முதலமைச்சர் உத்தரவு

கொரோனா சிகிச்சைக்காக உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகள் கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், உயிரிழப்புகளும் ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்காக உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி மற்றும் மருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,  கொரோனா சிகிச்சைக்கு உயிர்காக்கும்  Tocilizumb, Remdesivir, Enoxaparin போன்ற விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை மருத்துவ பணிகள் சேவைக்கழகம் மூலம் உடனடியாக கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  

தற்போதுவரை பாதி மருந்துகள் வந்துவிட்டன, மீதமுள்ள மருந்துகள் ஓரிரு நாளில் வந்தடையும். இந்த உயிர்காக்கும் ஊசி மருந்துகள் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்

எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »