Press "Enter" to skip to content

கேரளாவில் மேலும் 195 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் இன்று புதிதாக 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி கேகே ஷைலஜா வெளியிட்டார்.

அந்த தகவலின் படி, அம்மாநிலத்தில் இன்று புதிதாக 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 71 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 118 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள். 62 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். எஞ்சிய 15 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 102 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 108 பேர் குணமடைந்துள்ளனர். 

மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை 

என்றாலும் அங்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »