Press "Enter" to skip to content

கொரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார் – ராகுல் காந்தி

கொரோனாவை எதிர்த்துப் போராட மறுத்து பிரதமர் மோடி சரணடைந்துள்ளார் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டம் ஏதும் இல்லாததால் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் புதிதாகப் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவியுள்ளது. அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஊடகங்களில் வந்துள்ள செய்திகளை இணைத்துள்ளார்.

பிரதமர் மோடி அமைதியாக உள்ளார். கொரோனாவை எதிர்த்துப் போராட மறுத்து அவர் சரணடைந்துள்ளார் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »