மணிப்பூரில் வரும் ஜூலை 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அம்மாநில முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
உக்ரூல்:
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
இதற்கிடையே, மணிப்பூரில் 1,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 432 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், மணிப்பூரில் வரும் ஜூலை 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அம்மாநில முதல் மந்திரி பைரன் சிங் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் கூறுகையில், வரும் ஜூலை 1-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை அடுத்த 15 நாட்களுக்கு மணிப்பூரில் ஊரடங்கை நீட்டிப்பது என முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில் நேற்று இரவு 7 மணி முதல் அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் கடந்த வாரம் ஊரடங்கை நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar