Press "Enter" to skip to content

58 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 329 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு

சிகிச்சைபெறுபவர்களும் உள்ளடக்கம். 

மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 2 ஆயிரத்து 357 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் – 425

செங்கல்பட்டு – 3,113

சென்னை – 40,111

கோவை – 252

கடலூர் – 813

தர்மபுரி – 41

திண்டுக்கல் – 310

ஈரோடு – 80

கள்ளக்குறிச்சி – 443

காஞ்சிபுரம் – 925

கன்னியாகுமரி – 180

கரூர் – 124

கிருஷ்ணகிரி – 52 

மதுரை – 967

நாகை – 106

நாமக்கல் – 90

நீலகிரி – 41

பெரம்பலூர் – 156

புதுக்கோட்டை – 79

ராமநாதபுரம் – 318

ராணிப்பேட்டை – 535

சேலம் – 311

சிவகங்கை – 118

தென்காசி – 207

தஞ்சாவூர் – 293

தேனி – 234

திருப்பத்தூர் – 80

திருவள்ளூர் – 2,793

திருவண்ணாமலை – 1,050

திருவாரூர் – 283

தூத்துக்குடி – 758

திருநெல்வேலி – 619

திருப்பூர் – 124

திருச்சி – 456

வேலூர் – 443

விழுப்புரம் – 601

விருதுநகர் – 296

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 203

உள்நாடு – 114

ரெயில் நிலைய கண்காணிப்பு – 234

மொத்தம் – 58,378

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »