Press "Enter" to skip to content

1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா – மாவட்ட வாரியாக விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 329 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களும் உள்ளடக்கம்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அரியலூர் – 463

செங்கல்பட்டு – 6,139

சென்னை – 64,689

கோவை – 645

கடலூர் – 1,143

தர்மபுரி – 107

திண்டுக்கல் – 618

ஈரோடு – 206

கள்ளக்குறிச்சி – 1,102

காஞ்சிபுரம் – 2,272

கன்னியாகுமரி – 489

கரூர் – 153

கிருஷ்ணகிரி – 170 

மதுரை – 3,423

நாகை – 273

நாமக்கல் – 101

நீலகிரி – 119

பெரம்பலூர் – 164

புதுக்கோட்டை – 252

ராமநாதபுரம் – 1,143

ராணிப்பேட்டை – 978

சேலம் – 1,127

சிவகங்கை – 376

தென்காசி – 391

தஞ்சாவூர் – 478

தேனி – 927

திருப்பத்தூர் – 216

திருவள்ளூர் – 4,343

திருவண்ணாமலை – 2,181

திருவாரூர் – 513

தூத்துக்குடி – 1,055

திருநெல்வேலி – 921

திருப்பூர் – 197

திருச்சி – 803

வேலூர் – 1,667

விழுப்புரம் – 1,020

விருதுநகர் – 679

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 410

உள்நாட்டு – 355

ரெயில் நிலைய கண்காணிப்பு – 413

மொத்தம் – 1,02,721

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »