Press "Enter" to skip to content

அழிக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை மீட்க நடவடிக்கை- சிபிசிஐடி ஐ.ஜி.சங்கர்

அழிக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.சங்கர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி:

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி ஜஜி சங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியுதாவது:-

சாத்தான்குளம் சம்பவத்தில் சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கைதாகிய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,2 எஸ்.ஐ. 2 காவலர்கள் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அழிக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »