Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சுமார் 45 ஆயிரம் பேர் – மாவட்ட வாரியாக விவரங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 44 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று 4 ஆயிரத்து 280 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 1 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 60 ஆயிரத்து 592 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் உள்பட):-

அரியலூர் – 27

செங்கல்பட்டு – 3,023

சென்னை – 24,195

கோவை – 435

கடலூர் – 357

தர்மபுரி – 62

திண்டுக்கல் – 311

ஈரோடு – 136

கள்ளக்குறிச்சி – 655

காஞ்சிபுரம் – 1,448

கன்னியாகுமரி – 329

கரூர் – 30

கிருஷ்ணகிரி – 106 

மதுரை – 2,725

நாகை – 173

நாமக்கல் – 14

நீலகிரி – 79

பெரம்பலூர் – 11

புதுக்கோட்டை – 210

ராமநாதபுரம் – 914

ராணிப்பேட்டை – 542

சேலம் – 855

சிவகங்கை – 260

தென்காசி – 200

தஞ்சாவூர் – 169

தேனி – 712

திருப்பத்தூர் – 174

திருவள்ளூர் – 1,617

திருவண்ணாமலை – 1,234

திருவாரூர் – 195

தூத்துக்குடி – 301

திருநெல்வேலி – 338

திருப்பூர் – 73

திருச்சி – 419

வேலூர் – 1,209

விழுப்புரம் – 456

விருதுநகர் – 429

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 206

உள்நாடு – 236

ரெயில் நிலைய கண்காணிப்பு – 91

மொத்தம் – 44,956

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »