Press "Enter" to skip to content

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது தற்காலிக வெற்றி- சுகாதாரத்துறை செயலாளர்

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது தற்காலிக வெற்றி என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

சென்னை:

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது தற்காலிக வெற்றி என்று கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று சொல்வதைவிட அதை தடுக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மதுரை, ராமநாதபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »