Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் – மாவட்ட வாரியாக விவரங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் – 21

செங்கல்பட்டு – 3,068

சென்னை – 24,890

கோவை – 464

கடலூர் – 365

தர்மபுரி – 69

திண்டுக்கல் – 373

ஈரோடு – 162

கள்ளக்குறிச்சி – 686

காஞ்சிபுரம் – 1,531

கன்னியாகுமரி – 310

கரூர் – 37

கிருஷ்ணகிரி – 110 

மதுரை – 2,975

நாகை – 171

நாமக்கல் – 18

நீலகிரி – 75

பெரம்பலூர் – 12

புதுக்கோட்டை – 236

ராமநாதபுரம் – 941

ராணிப்பேட்டை – 606

சேலம் – 842

சிவகங்கை – 327

தென்காசி – 240

தஞ்சாவூர் – 184

தேனி – 634

திருப்பத்தூர் – 169

திருவள்ளூர் – 1,650

திருவண்ணாமலை – 1,342

திருவாரூர் – 191

தூத்துக்குடி – 311

திருநெல்வேலி – 350

திருப்பூர் – 79

திருச்சி – 485

வேலூர் – 1,347

விழுப்புரம் – 565

விருதுநகர் – 502

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 196

உள்நாடு – 236

ரெயில் நிலைய கண்காணிப்பு – 92

மொத்தம் – 46,860

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »