Press "Enter" to skip to content

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 5368 பேருக்கு கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 5,368 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.11 லட்சத்தைத் தாண்டியது.

மும்பை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஐந்தாவது கட்டமாக ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 5,368 பேருக்கு கொரோனா உறுதியானது. இன்று மேலும் 5 ஆயிரத்து 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 204 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,026 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »