Press "Enter" to skip to content

தமிழகத்தில் 1 லட்சத்து 18 ஆயிரத்தை கடந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக விவரம்

தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 616 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் 

இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. 

ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அரியலூர் – 475

செங்கல்பட்டு – 6,942

சென்னை – 71,230

கோவை – 839

கடலூர் – 1,342

தர்மபுரி – 124

திண்டுக்கல் – 730

ஈரோடு – 286

கள்ளக்குறிச்சி – 1,274

காஞ்சிபுரம் – 2,836

கன்னியாகுமரி – 757

கரூர் – 174

கிருஷ்ணகிரி – 203 

மதுரை – 4,674

நாகை – 314

நாமக்கல் – 118

நீலகிரி – 150

பெரம்பலூர் – 170

புதுக்கோட்டை – 418

ராமநாதபுரம் – 1,479

ராணிப்பேட்டை – 1,312

சேலம் – 1,340

சிவகங்கை – 576

தென்காசி – 530

தஞ்சாவூர் – 533

தேனி – 1,222

திருப்பத்தூர் – 322

திருவள்ளூர் – 5.205

திருவண்ணாமலை – 2,633

திருவாரூர் – 576

தூத்துக்குடி – 1,416

திருநெல்வேலி – 1,295

திருப்பூர் – 237

திருச்சி – 1,059

வேலூர் – 2,097

விழுப்புரம் – 1,233

விருதுநகர் – 1,228

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 448

உள்நாட்டு – 376

ரெயில் நிலைய கண்காணிப்பு – 421

மொத்தம் – 1,18,594

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »