தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 71 ஆயிரத்து 116 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,636 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் – 23
செங்கல்பட்டு – 2,851
சென்னை – 22,374
கோவை – 548
கடலூர் – 410
தர்மபுரி – 54
திண்டுக்கல் – 358
ஈரோடு – 196
கள்ளக்குறிச்சி – 554
காஞ்சிபுரம் – 1,663
கன்னியாகுமரி – 438
கரூர் – 45
கிருஷ்ணகிரி – 118
மதுரை – 3,486
நாகை – 184
நாமக்கல் – 26
நீலகிரி – 101
பெரம்பலூர் – 14
புதுக்கோட்டை – 247
ராமநாதபுரம் – 953
ராணிப்பேட்டை – 703
சேலம் – 869
சிவகங்கை – 288
தென்காசி – 273
தஞ்சாவூர் – 172
தேனி – 793
திருப்பத்தூர் – 184
திருவள்ளூர் – 1,744
திருவண்ணாமலை – 1,311
திருவாரூர் – 206
தூத்துக்குடி – 535
திருநெல்வேலி – 591
திருப்பூர் – 96
திருச்சி – 435
வேலூர் – 1,320
விழுப்புரம் – 487
விருதுநகர் – 670
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 207
உள்நாடு – 215
ரெயில் நிலைய கண்காணிப்பு – 97
மொத்தம் – 45,839
Related Tags :
Source: Maalaimalar