Press "Enter" to skip to content

பாகிஸ்தானை விடாத கொரோனா – 5 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

பாகிஸ்தானில் ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பலியானோர் அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இஸ்லாமாபாத்:

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.43 லட்சத்தை நெருங்குகிறது.

தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,43,599 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் நேற்று 2 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1.49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »