Press "Enter" to skip to content

உலக இளைஞர் திறன் தினம் – நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்ற உள்ளார்.

புதுடெல்லி: 

ஸ்கில் இந்தியா (திறன் இந்தியா) திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2022க்குள், நாடு முழுவதும், 40 கோடி இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

ஆண்டு தோறும் ஜூலை 15-ம் தேதி உலக இளைஞர் திறன் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இத்தினத்தை முன்னிட்டும், திறன் இந்தியா திட்டம் தொடங்கியதன் 5-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டும் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் இன்று உரையாடுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »