Press "Enter" to skip to content

எளாவூர் சோதனைச்சாவடியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச்சாவடியில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் சோதனைச்சாவடியில் தமிழக பதிவு எண் கொண்ட காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி ஆந்திராவில் இருந்து எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக 3 பேரை பிடித்து தனி அறையில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான தகவல் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »