Press "Enter" to skip to content

ரூ.38 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 37,736ரூபாயாக இருந்த நிலையில் இன்று 544 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது.

மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 40,152 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 60100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 65,700 ரூபாயாக உள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »