கேரளாவில் நேற்று ஒரே நாளில் 1,310 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான நேற்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அந்த தகவலின் படி, மாநிலத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,310 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 864 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால்
மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 27 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 3 உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar