Press "Enter" to skip to content

2-ம் கட்ட கொரோனா பரிசோதனை – இங்கிலாந்தில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு

கொரோனா தடுப்பூசியில் முதல்கட்ட பரிசோதனை வெற்றிகண்ட நிலையில் அடுத்த கட்டமாக 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சோதிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

லண்டன்:

கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பரிசோதனையில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரியை விஞ்ஞானிகள் ஏற்கனவே கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து முதல்கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

முதல் கட்டபரிசோதனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் கவலை தரக்கூடிய உடல் பாதிப்புகளும் ஏற்படாததால் அடுத்த கட்டமாக சுமார் 300 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி சோதிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இந்த 300 பேரில் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் அடங்குவர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்த தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் ராபின் ஷாடோக் கூறும்போது, “எங்களது தடுப்பூசி நல்ல வேலை செய்கிறது. எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை. எனவே நாங்கள் அடுத்த அடியை முன் நோக்கி வைக்கிறோம். அக்டோபர் மாதத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி போதிப்பதை உறுதி செய்யும் விதமாக தற்போது நூற்றுக்கணக்கானோரை இந்தப் பரிசோதனையில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். இது வேலை செய்யும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” எனக் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »