Press "Enter" to skip to content

கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்து: 180 பேர் கதி என்ன?

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது.

அந்த விமானம் தரையிறங்கும்போது ஒடுதளத்தில் சறுக்கி விபத்திற்குள்ளானது. இதனால் அருகில் உள்ள 30 அடி பள்ளத்திற்குள் விமானம் சென்றது. அந்த விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர். இரண்டு விமானிகள், 4 பணியாளர்கள் இருந்துள்ளனர். பயணம் செய்தவர்களுக்கு ஏதாவது அசாம்பாவிதம் நடைபெற்றதா? என்பது குறித்து முழு விவரம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

விமானத்தின் முன்பகுதியில் பயணம் செய்தவர்களுக்க பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »