Press "Enter" to skip to content

அந்தமான் நிகோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு – இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கான அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை மற்றும் போர்ட்பிளேயரை இணைக்கும் நீர்மூழ்கி ஆப்டிகல் பைபர் கேபிள் இணைப்பை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

இந்த இணைப்பு அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு விரைவான மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொலைதொடர்பு சேவைகளை வழங்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேபிள் சுமார் ஆயிரத்து 224 கோடி ரூபாய் செலவில் சுமார் 2,300 கிலோ மீட்டர் தூரத்திற்கு போடப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் தீவின் சுற்றுலா, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »