கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மெக்சிகோ சிட்டி:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.12 கோடியைக் கடந்துள்ளது. 7.60 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1.40 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 7-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் பாதிப்பு அடைந்தோர்
எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மெக்சிகோவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
3.41 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 1.08 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar