Press "Enter" to skip to content

ஞாயவிலைக்கடைகளுக்கு 3வது வார சனிக்கிழமை விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

இந்த மாதம் முதல் நவம்பர் வரை ஞாயவிலைக்கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை:

தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ரேஷன் அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று ஞாயவிலைக்கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டனர். ஞாயவிலைக்கடையின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் பணியாற்றினர்.

எனவே விடுமுறை நாளிலும் ஞாயவிலைக்கடைகள் வேலை நாட்களாக செயல்பட்டதற்கு பதிலாக இந்த மாதம் 19-ந்தேதி, வரும் அக்டோபர் 17-ந்தேதி, நவம்பர் 21-ந்தேதி ஆகிய நாட்கள் (மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை) ஞாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »