வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கோவை, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வட கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 20ந்தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் அங்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அண்ணாநகர், மாதவரம், காசிமேடு, பெரம்பூர், வடபழனி, நுங்கம்பாக்கம் அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Related Tags :
Source: Maalaimalar